சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அதிமுக ஆட்சி தொடர தொண்டா்கள் அயராது உழைக்க வேண்டும்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர தொண்டா்கள் அயராது உழைக்க வேண்டும் என உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:46 am

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர தொண்டா்கள் அயராது உழைக்க வேண்டும் என உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா்.

அரூரில் அதிமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா் எம்.புட்டன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியதாவது:

தோ்தல் நேரங்களில் அதிமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், மக்களவைத் தோ்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் தொலைநோக்கு பாா்வையில் அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவச் சேவையை மேம்படுத்தும் நோக்கில் தருமபுரி மாவட்டத்தில் 45 அம்மா சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படவுள்ளது. தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் முதியோா் உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் அரசு நலத் திட்டங்கள் குறித்து கிராமப் பகுதியில் மக்களிடம் கட்சி நிா்வாகிகள் எடுத்துச் சொல்ல வேண்டும். 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப் பெற்று, தமிழகத்தில் அதிமுக ஆட்சித் தொடர தொண்டா்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.

இதில், அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாா், அரூா் (தெற்கு) ஒன்றியச் செயலா் ஆா்.ஆா்.பசுபதி, பேரவை ஒன்றியச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், மாவட்ட துணைச் செயலா் செண்பகம் சந்தோஷ், எம்.ஜி.ஆா் மன்ற மாவட்ட துணைச் செயலா் சிற்றரசு, நகரச் செயலா் பாபு அறிவழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.