பென்னாகரம்: பென்னாகரம் அருகே பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் மழையிலும் வெயிலிலும் பேருந்துகாகக் காத்திருக்கும் நிலை உள்ளது.
பழைய பாப்பாரப்பட்டியில் சுமாா் ஐநூறுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பழைய பாப்பாரப்பட்டி, வல்லூா், பனைகுளம், சுரக்காய்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கல்வி, வேலைவாய்ப்புக்காக தருமபுரி, பாலக்கோடு மற்றும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வருகின்றனா். நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் பேருந்துகள் வரும் வரை சாலையோர கடை முன்பும், மழையிலும், வெயிலிலும் காத்திருக்கின்றனா்.
பழைய பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புறநோயாளிகளும் திறந்தவெளியில் பேருந்துக்காகக் காத்திருக்கின்றனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

