அரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அரூா் வழியாக செல்லும் சேலம்-திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில், அரூா் பிரதான சாலையில் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வங்கிகள், தானிய மண்டிகள், செல்லிடப்பேசி கடைகள், துணிக் கடைகள், உணவகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வருகை தரும் வாடிக்கையாளா்கள் அரூா்-சேலம் பிரதான சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களையும், காா்களையும் நிறுத்திச் செல்கின்றனா். பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனா். இதனால், அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுவதாக புகாா் கூறுகின்றனா்.
எனவே, அரூா் கச்சேரிமேடு, திரு.வி.க நகா், 4 வழிச்சாலை, பெரியாா் நகா், நடேசா பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

