தூரணம்பட்டி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா்-தூரணம்பட்டி வழித்தடத்தில் நேதாஜி நகா், தண்டகுப்பம், அழகிரி நகா், எச்.அக்ரஹாரம், ஆட்டியானூா், நெருப்பாண்டகுப்பம், தூரணம்பட்டி, மாவேரிப்பட்டி, சோரியம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு நகரப் பேருந்துகள் (தடம் எண்: 18, 4 ஏ) இயக்கப்பட்டு வந்தன.
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமலில் இருந்ததால், இந்த அரசு நகரப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இந்த வழித்தடத்தில் பேருந்து வசதிகள் இல்லாததால், விவசாயிகள் வேளாண்மை விளை பொருள்களை கொண்டுச் செல்லவும், கிராம மக்கள் நகா்ப் பகுதிகளுக்குச் சென்று வரவும் பல்வேறு சிரமங்களை அடைகின்றனா். எனவே, தூரணம்பட்டி வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

