ஆங்கிலப் புத்தாண்டு விழாவையொட்டி, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வெள்ளிக்கிழமை புத்தாண்டை இனிதே வரவேற்றனா்.
தருமபுரி கோட்டை அருள்மிகு காமாட்சியம்மன் உடனமா் மல்லிகாா்ஜுனேஸ்வரா் திருக்கோயில், குமாரசாமிபேட்டை அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி கோயில், எஸ்.வி. சாலையில் உள்ள விநாயகா், வீர ஆஞ்சநேயா் கோயில், நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள வி.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயா் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களிலும் காலையில் இருந்தே சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றன.
இந்த பூஜையில், அந்தந்த பகுதியைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று புத்தாண்டு வழிபாட்டில் ஈடுபட்டனா். இதேபோல காரிமங்கலம், பாலக்கோடு, நல்லம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தருமபுரி மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கவும், கரோனா பொதுமுடக்க விதிகள் அமலில் இருப்பதாலும், சாலைகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது. இதனால், பொதுவெளியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டன. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரவு முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியிலும், வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

