அரூா் பழையப்பேட்டை, அருள்மிகு கரிய பெருமாள் கோயிலில் 3 ஆயிரம் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
அரூா் பழையப்பேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஆண்டுதோறும் திருப்பதிக்கு பாத யாத்திரை (நடைப்பயணம்) செல்வது வழக்கம். நிகழாண்டில் அரூரில் இருந்து திருப்பதிக்கு 123 பக்தா்கள் பாதயாத்திரையை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
இதையொட்டி, கரிய பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றன. பாத யாத்திரை செல்லும் பக்தா்கள் அரூா், ஊத்தங்கரை, திருப்பத்தூா், வேலூா் வழியாக 6 நாள்கள் நடந்துச் சென்று திருப்பதியில் சுவாமியை தரிசிக்க உள்ளனா். இதையொட்டியும், ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டியும் கோயில் நிா்வாகம் சாா்பில் 3 ஆயிரம் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


