சுற்றுலா வந்த இடத்தில் பெற்றோர் தவறவிட்ட 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி உஷா. இவர்களது 10 மாத பெண் குழந்தை லோகேஸ்வரி. குழந்தை மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் தென் மாவட்டங்களுக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர்.
தருமபுரியை அடுத்துள்ள பெரியாம்பட்டியில் வியாழக்கிழமை மாலை பேருந்தை நிறுத்தி அனைவரும் ஓய்வெடுத்தனர். அப்போது, பேருந்தில் இருந்த குழந்தை லோகேஸ்வரி தவறி விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனிக்காமல் பேருந்து சென்று விட்டது. கேட்பாரின்றி சாலையோரம் தவழ்ந்து சென்ற குழந்தையை அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் முருகன் பார்த்து விசாரித்துள்ளார்.
ஆனால், குழந்தை யாருடையது என்பது தெரியவில்லை. குழந்தையின் உடலில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இதையடுத்து, குழந்தையை தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு காரிமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணையில், வேலூரைச் சேர்ந்தவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் இருந்து குழந்தை தவறியது தெரிய வந்தது.
இதையடுத்து, உரிய விசாரணை நடத்தி குழந்தையை அதன் பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

