பென்னாகரம் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள பென்னாகரம் ஒன்றிய ஆசிரியர்கள் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது.
இதில், வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்களை தேர்வு செய்து, வெள்ளிக்கிழமை பதவியேற்பு விழா நடைபெற்றது.
தலைவராக எட்டிக்குட்டை அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கே. ரங்கநாதன் பொறுப் பேற்றுக் கொண்டார்.
துணைத் தலைவராக கருங்கல்மேடு அரசுப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். செல்வராஜ் பதவியேற்றார்.
இயக்குநர்களாக என்.எம். முருகேசன், அ. மணி, வெ.பழனிச்சாமி, சி. லைலா, இ. கௌதம்மாள், சி.சுசிலா, எம். அருள், வெ.சிந்தாமணி, வி.சிந்தாமணி ஆகியோர் பதவியேற்றனர்.
விழாவுக்கு தலைமையாசிரியர் மா. பழனி தலைமை வகித்தார். பென்னாகரம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

