பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், கைதான பாமகவினர் அனைவரையும் விடுதலை
செய்ய வலியுறுத்தியும், தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஒட்டப்பட்டியில் வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.
குறிப்பாக பென்னாகரம் முழுவதும் அறிவிக்கப்படாத பந்த் போல காட்சியளித்தது. பென்னாகரம் வட்டத்துக்குள்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும், கிருஷ்ணாபுரம், பென்னாகரம் கடை வீதி, பிராமணர் தெரு, வாணியர் தெரு, லாடக்காரத் தெரு, திருவள்ளுவர் நகர், முள்ளுவாடி, இந்திரா நகர், பருவதனஹள்ளி, நாகமரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்த பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேலும், ஆட்டோ, கார், சுற்றுலா வாகனங்கள், லாரிகள் இயக்கப்படாததால் அனைத்துச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன.
பேருந்துகளுக்கு பாதுகாப்பு: பென்னாகரம், ஒகேனக்கல்லுக்கு வந்து சென்ற பேருந்துகள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் வந்தன. மேலும், பென்னாகரம் நகர்ப் பகுதி மட்டுமல்லாது சோமனஹள்ளி, இண்டூர் வரையிலும் ஆங்காங்கே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வணிகர்கள், வியாபாரிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து கடைகளை அடைத்திருந்தனர்.
இதேபோல, தருமபுரி அரசு கலைக் கல்லூரியிலிருந்து தொடங்கி ஒட்டப்பட்டி அவ்வை வழி வரையிலும் சாலைகளின் இருபுறமும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

