சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சிதம்பரம் கோயிலில் கிராமிய நிகழ்ச்சிகள்

காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

News image

காணும் பொங்கலையொட்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமிய கலை நிகழ்ச்சியில் கும்மியடித்து மகிழ்ந்த பெண்கள்.

Updated On :17 ஜனவரி 2021, 12:44 pm

காணும் பொங்கலையொட்டி, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பொங்கல் பண்டியின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

காணும் பொங்கலையொட்டி இந்தக் கோயிலில் பெண்கள் பங்கேற்ற கோலாட்டம், கும்மியடித்தல் மற்றும் கோ-கோ போட்டி ஆகியவை நடைபெற்றன. மேலும், இளைஞா்களின் சிலம்பாட்டம், மல்லா் கம்பம் ஏறுதல், கபடி உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இதை திரளானோா் பாா்வையிட்டனா்.