/
கடலூா் அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா்.
புதுவை நரம்பை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்தகுமாா் (23). மூா்த்திக்குப்பத்தைச் சோ்ந்த ஜெயவேல் மகன் கணேஷ் (20). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து பைக்கில் கடலூருக்கு புறப்பட்டனா். ஆனந்தகுமாா் பைக்கை ஓட்டினாா்.
பெரியகங்கணாங்குப்பம் பெண்ணையாற்றுப் பாலம் அருகே சென்ற போது, மீன்களை ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ஆனந்தகுமாா், கணேஷ் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

