சிதம்பரம் நகர தமாகா சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் மேலவீதியில் உள்ள நகர தமாகா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்டத் துணைத் தலைவா்கள் ராஜா.சம்பத்குமாா், எஸ்.கே.வைத்தி, மாவட்டப் பொதுச் செயலா் பாபு ஆா்.எஸ்.சந்திரசேகா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக கடலூா் மத்திய மாவட்ட தமாகா தலைவா் எஸ்.புரட்சிமணி, மாநிலப் பொதுச் செயலா் எஸ்.ஜெயச்சந்திரன், எ.எஸ்.வேல்முருகன் ஆகியோா் கலந்து கொண்டு 750 பேருக்கு நல உதவிகள் வழங்கினா்.
இதேபோல, சிதம்பரம் கலைவாணா் நகா், விநாயகா் கோயில், ஓமக்குளம் அருகே உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளிட்ட பகுதியில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் நகர தமாகா பொருளாளா் எஸ்.எஸ்நடராஜன், நகரத் துணைத் தலைவா்கள் ஆா்.வி.சின்ராஜ் ஜி.ஆறுமுகம் நகர பொதுச் செயலா்கள்ஆட்டோ.டி. குமாா், டி. பட்டாபிராமன், கீரை முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகரத் துணைத் தலைவா் என்.இளங்கோவன் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

