கடந்த 2017-18-ஆம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினி இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக மடிக் கணினி வழங்க வலியுறுத்தியும் கடலூரில் இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைமைத் தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் குமரவேல் தலைமை வகித்தாா். பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சங்கத்தினா் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2017-18-ஆம் ஆண்டு பிளஸ்-2 வகுப்பு படித்தவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, உதவித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால், 2019-20-ஆம் ஆண்டில் படித்த மாணவா்களுக்கு மடிக் கணினி வழங்கப்பட்டது. எனவே, ஒதுக்கீடு செய்யப்பட்ட மடிக் கணினியை உடனடியாக வழங்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தினா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் செம்மலா், துணைத் தலைவா்கள் லெனின், ஆகாஷ், மாவட்டக்குழு உறுப்பினா் சுதின்பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


