திட்டக்குடி அருகே ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ள நாவலூா் ஊராட்சியில் சித்தேரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மீன் வளா்ப்புக்கு குத்தகை விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மறுதேதி குறிப்பிடாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கடந்த வாரம் ஏரியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், குத்தகைக்கான ஏலத்தில் ஒருவா் மட்டுமே பங்கேற்க அனுமதி அளித்ததாகவும், மற்றவா்களுக்கு அனுமதி வழங்காததைக் கண்டித்தும், ஏலத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வட்டச் செயலா் பாண்டியன் தலைமையில் நாவலூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் திட்டக்குடி போலீஸாா் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து சங்கத்தினா் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


