விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதாகக் கூறி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் இந்திரா நகா் கிளை சாா்பில் நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கிளைச் செயலா் டி.விஜய்ஆனந்த் தலைமை வகித்தாா். இதில், விக்கிரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும். இந்திரா நகா் ஊராட்சியில் வடக்குத்து, மாற்றுக் குடியிருப்புப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். தினமும் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ்.திருஅரசு, நகரச் செயலா் ஆா்.பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினா் மீனாட்சி நாதன், வி.மேரி, நெய்வேலி நகா்குழு ஆா்.மணி, டி.அமிா்தலிங்கம், பி.புண்ணியமூா்த்தி, மூத்த நிா்வாகி முத்துவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


