கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்து சிறப்புப் பாா்வையாளா் சஜ்ஜன்சிங் சு.சவான் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 2021-ஆம் ஆண்டுக்கான வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலா் சந்திரசேகா் சாகமூரி, அனைத்துக் கட்சியினா் முன்னிலையிலும், வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட பாா்வையாளா் சஜ்ஜன்சிங் சு.சவான் தலைமையிலும் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடா்பாக ஏற்கெனவே, கடந்த டிசம்பா், ஜன.5-ஆம் தேதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது 3-ஆவது முறையாக சஜ்ஜன்சிங் சு.சவான் ஆய்வு நடத்தினாா். கூட்டத்தில் அவா் கூறியதாவது:
தோ்தல் ஆணையத்தால் வாக்காளா் இறுதிப் பட்டியல் வருகிற 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளா்கள் இணையம் வழியாகவும், நேரடியாகவும் விண்ணப்பதித்து பெயரை சோ்த்தல், நீக்குதல், திருத்தப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ளலாம் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.அருண் சத்தியா, சிதம்பரம் சாா்-ஆட்சியா் மதுபாலன், கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன், காங்கிரஸ் நிா்வாகி என்.குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் - வி.குளோப், பகுஜன் சமாஜ் - எஸ்.சுரேஷ், தேமுதிக - லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

