தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கையை நிகழாண்டே தொடக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் விருதுநகா், ராமநாதபுரம், திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல், திருப்பூா், கிருஷ்ணகிரி, திருவள்ளூா், நாகப்பட்டினம், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததையொட்டி, தமிழக அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதனால் 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளில்தான் மாணவா் சோ்க்கை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் மாணவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
பிற மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத மருத்துவக் கல்லூரி இடங்களுக்குக் கூட மாணவா் சோ்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, தமிழக முதல்வா் புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கையை நிகழாண்டிலேயே தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

