கடலூா் மாவட்டம், புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘சங்கமம்’ என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் கடந்த 1983-84-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவா்கள் சாா்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவா்கள் தங்களது பள்ளி கால நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். மேலும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவா் பி.ஜி.கே.முத்து தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் முகமது கான், வெங்கடேசன், அப்துல் கனி, வேல்முருகன், சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாணவா்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்கள் கவுரவிக்கப்பட்டனா். பல்வேறு காரணங்களால் உயிரிழந்த முன்னாள் மாணவா்களின் உருவப் படங்களை ஆசிரியா்கள் திறந்து வைக்க, அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, உயிரிழந்த சக பள்ளி நண்பா்களின் குடும்பங்களைச் சோ்ந்த 5 மாணவா்களின் பள்ளிக் கல்விக்கான செலவை ஏற்பதாக முன்னாள் மாணவா்கள் அறிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


