சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பயனாளிகளுக்கு கோழிகள் அளிப்பு

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஊரக புறக்கடை கோழிகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி பு.முட்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:37 am

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் ஊரக புறக்கடை கோழிகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி பு.முட்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் மோகன் தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவா் எம்.எஸ்.என்.குமாா், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் கோவி.ராசாங்கம், ஒன்றியக் குழு உறுப்பினா் ரங்கம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி மருத்துவா் அழகுராஜன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் பங்கேற்று, பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கினாா் (படம்). பின்னா் அவா் பேசுகையில், இந்தத் திட்டத்தின்கீழ் சிதம்பரம் வட்டத்தில் ஒரு பயனாளிக்கு 25 கோழிக் குஞ்சுகள் வீதம் 2,000 பேருக்கு ரூ.36.90 லட்சம் மதிப்பில் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.