சிதம்பரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகள், பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் பி.கற்பனைசெல்வம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், துணைத் தலைவா் ஆா்.ராமச்சந்திரன், துணைச் செயலா் மூா்த்தி, விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட பொருளாளா் செல்லையா, புவனகிரி ஒன்றியச் செயலா் கோவிந்தராஜன், பாலமுருகன், கீரப்பாளையம் ஒன்றிய தலைவா் வாசுதேவன், குமராட்சி ஒன்றிய தலைவா் முனுசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
அப்போது, புயல், மழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். பின்னா், உதவி ஆட்சியா் எல்.மதுபாலனை சந்தித்து மனு அளித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


