சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடலூரில் கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பாா்வையிட்டாா்.

News image

கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி.

Updated On :9 ஜனவரி 2021, 5:25 am

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகையை மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது: முன்கூட்டியே பதிவு செய்துள்ள மருத்துவப் பணியாளா்களுக்கு மட்டும் முதல்கட்டமாக தடுப்பூசி வழங்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவா்களின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடலூா் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்குவதற்காக 26 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 8,546 மருத்துவ பணியாளா்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. தடுப்பூசி வழங்கும் ஒத்திகையானது கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கிருஷ்ணா புற்றுநோய் மருத்துவமனை, வடலூா், பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடத்தப்பட்டது என்றாா்.