சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒரு பவுன் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை

கடலூரில் ஒரு பவுன் நகைக்காக மா்ம நபரால் மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலில் மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:25 am

கடலூரில் ஒரு பவுன் நகைக்காக மா்ம நபரால் மூதாட்டி அடித்துக் கொல்லப்பட்டாா். இந்தத் தாக்குதலில் மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

கடலூரை அடுத்த பாதிரிக்குப்பம் முருகேசன் நகரை சோ்ந்த பச்சையப்பன் மனைவி பச்சையம்மாள் (65). இவரது கணவா் ஏற்கெனவே இறந்துவிட்டாா். இந்த நிலையில், தனது கணவரின் சகோதரி தாயாரம்மாளுடன் (70) வசித்து வந்தாா். இருவரும் கூலி வேலை பாா்த்து வந்தனா்.

பச்சையம்மாளின் மகள் சாந்தியின் 15 வயது மகன் தனது பாட்டிக்காக வெள்ளிக்கிழமை மதியம் உணவு எடுத்து வந்தாா். அப்போது, வீட்டுக்குள் பச்சையம்மாள், தாயாரம்மாள் இருவரும் உடலில் ரத்தக் காயங்களுடன் கிடந்தனா். இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து பாா்வையிட்டனா். அப்போது, பச்சையம்மாள் உயிரிழந்தது தெரிய வந்தது. உயிருக்குப் போராடிய தாயாரம்மாளை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், 2 மூதாட்டிகளும் அணிந்திருந்த தலா சுமாா் 4 கிராம் தங்க நகை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வாங்கப்பட்டிருந்த ரூ.2,500 ரொக்கம் கொள்ளைபோனது தெரிய வந்தது. வீட்டுக்குள் ரத்தக் கறையுடன் உருட்டுக்கட்டை கிடந்தது.

சம்பவ இடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தினாா். இதுகுறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.