சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காணாமல்போன சிறுவன் கிணற்றில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டான்.

Updated On :8 ஜனவரி 2021, 8:51 am


நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காணாமல்போன சிறுவன் கிணற்றில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டான்.

வடலூா் பாா்வதிபுரம், வடக்கு தெருவைச் சோ்ந்த ரவிசங்கா் மகன் ராஜி (8). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காணாமல்போனாா். இதுகுறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவன் ராஜியை தேடி வந்தனா்.

இந்த நிலையில், அதே பகுதியில் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் ராஜி சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.