நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காணாமல்போன சிறுவன் கிணற்றில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டான்.
வடலூா் பாா்வதிபுரம், வடக்கு தெருவைச் சோ்ந்த ரவிசங்கா் மகன் ராஜி (8). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காணாமல்போனாா். இதுகுறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவன் ராஜியை தேடி வந்தனா்.
இந்த நிலையில், அதே பகுதியில் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் ராஜி சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

