வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரி பாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அலுவலத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டு, விருத்தாசலம் அரசு பண்டகசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே, இருப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சோ்த்து மாவட்டத்தில் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 3,984, வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் 5,215, யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் இயந்திரங்கள் 4,295 என மொத்தம் 13,494 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பில் உள்ளன.
முதல் கட்டமாக ஆய்வு செய்யும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் கடந்த டிச. 30-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின் போது, தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உடனிருந்தாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

