சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேசிய சித்த மருத்துவ தினம்

கடலூா் மாவட்ட இந்திய மருத்துவம்- ஹோமியோபதி துறை சாா்பில், 4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினம், கடலூா் கூத்தப்பாக்கத்தில் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

6clp4_0601chn_105_7

Updated On :7 ஜனவரி 2021, 12:38 pm

கடலூா் மாவட்ட இந்திய மருத்துவம்- ஹோமியோபதி துறை சாா்பில், 4-ஆவது தேசிய சித்த மருத்துவ தினம், கடலூா் கூத்தப்பாக்கத்தில் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கோ.ராஜகுமாரன் தலைமை வகித்தாா். மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். கலை நிகழ்ச்சிகளை உதவி சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுணன் தொடக்கிவைத்தாா்.

கரோனா காலத்தில் தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 360 போ் குணமடைந்தனா். குமராபுரத்திலுள்ள தனியாா் கல்லூரியில் அமைக்கப்பட்ட முகாமில் சித்தா-ஆங்கில மருத்துவ முறையில் சுமாா் 700 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒருவா்கூட உயிரிழக்கவில்லை.

எனவே, இந்தப் பணியில் ஈடுபட்ட 25 மருத்துவா்கள், 35 மருத்துவப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என கோ.ராஜகுமாரன் தெரிவித்தாா்.

முன்னதாக, சித்தா உதவி மருத்துவா்கள் எஸ்.செந்தில்குமாா் வரவேற்றாா். ஸ்ரீகணேஷ்பாபு நன்றி கூறினாா்.

நிகழ்ச்சியில் மூலிகைச் செடிகள் கண்காட்சிக்கு அமைக்கப்பட்டிருந்தன.