கடலூா் மாவட்டத்தில் 2.44 லட்சம் குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி கூறினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது: போலியோ நோயைத் தடுப்பதற்காக கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 5 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பொருட்டு வரும் 17-ஆம் தேதி இந்த முகாம் நடைபெறுகிறது. இதற்காக, தோ்வு செய்யப்பட்ட 1611 மையங்களில் 5 வயதுக்குள்பட்ட 2,44,714 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளில் சுகாதாரத் துறையுடன் பள்ளிக்கல்வி, ஊட்டச்சத்து, சமூகநலம், வருவாய் துறையினா், இந்திய குழந்தைகள் நல மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமுக்கு 4 போ் வீதம் பல்வேறு துறைகளைச் சாா்ந்த 6,444 பணியாளா்கள், 196 மேற்பாா்வையாளா்கள் மாவட்ட அளவில் ஈடுபடுத்தப்படுத்தப்பட உள்ளனா். விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்து வரும் 18, 19 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்றுச் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்தியா, ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ராஜகோபால் சுங்காரா, உலக சுகாதார நிறுவன நோய் தடுப்பு மருத்துவா் சாயிராபா, ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி முதல்வா் மிஸ்ரா, மருத்துவ பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ் பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


