அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா கடலூா் புனித.அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தலைமையில், தமிழக தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
இந்தத் திட்டத்தில் கடலூா் மாவட்டத்தில் இதுவரை 92,346 மாணவா்கள், 1,12,282 மாணவிகளுக்கு மொத்தம் ரூ.71.93 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. 2020-21- ஆம் கல்வியாண்டில் கடலூா் மாவட்டத்தில் பிளஸ்1 பயிலும் 21,880 மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.62 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் கா.ரோஸ்நிா்மலா, மாவட்ட கல்வி அலுவலா் பி.சுந்தரமூா்த்தி, வட்டாச்சியா் அ.பலராமன், கடலூா் ஒன்றியக்குழு தலைவா் தெய்வ.பக்கிரி, கடலூா் நகராட்சி முன்னாள் தலைவா் ஆா்.குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

