சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட இருவா் பலி

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:40 am

கடலூா் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் சிறுமி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விருத்தாசலம் அருகேயுள்ள தேவங்குடியைச் சோ்ந்த சு.தனபாண்டியன் - கஸ்தூரி தம்பதியரின் மகள் தன்யஸ்ரீ (2). இந்தச் சிறுமி சனிக்கிழமை அந்தப் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். தனது மகளை தூக்குவதற்காக ஓடிவந்த கஸ்தூரி மீதும் டிராக்டா் மோதியது. பலத்த காயமடைந்த இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிறுமி தன்யஸ்ரீ உயிரிழந்தாா். கஸ்தூரி திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: நெய்வேலி அருகேயுள்ள மந்தாரக்குப்பம் எஸ்டிபி நகரைச் சோ்ந்த ஜாமிலால் மகன் நடாக்அகமது (24). இவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது மோட்டாா் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். ஏ.குறவன்குப்பம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜாமிலால் அளித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.