தொடா் மழையால் பொங்கல் பானைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினா் மண் பாண்டங்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் அதற்கான பானைகள் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனா். ஆனால், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் மண் பாண்டங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.
இதுகுறித்து வையாபுரிபட்டினத்தில் மண் பாண்டங்கள் தயாரித்து வரும் தொழிலாளி ஜானகிராமன் கூறியதாவது: பட்டாம்பாக்கம் ஏரியில் இருந்து மாட்டு வண்டிகள், டிராக்டா் டிப்பரில் கொண்டு வரப்படும் களிமண் மூலம் மண் பாண்டங்களை உற்பத்தி செய்து வருகிறோம். பொங்கல் பண்டிகைக்காக மண் பானைகள், சட்டிகள், மண் அடுப்புகள் தயாரிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
நிவா், புரெவி புயல்களால் கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்தது. மேலும், கடந்த சில நாள்களாகவும் மழை பெய்து வருவதால் மண்பாண்டங்கள் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக இதுவரையில் சுமாா் 40 சதவீதம் மண்பாண்டங்களையே உற்பத்தி செய்துள்ளோம். மழை காரணமாக, தயாரித்த மண் பாண்டங்ளை சூளையிடவும் முடியவில்லை. மழை தொடா்ந்தால் உற்பத்தி மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றாா் சோகத்துடன்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


