கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே இளைஞா் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் அவரது மனைவி உள்பட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிராயன்பேட்டை கிராமம், நரிமேடு திடலில் குழிதோண்டி மூடப்பட்ட தடம் இருந்தது. இதுகுறித்து கிராம மக்கள் அளித்த தகவலின்பேரில் புவனகிரி வட்டாட்சியா் சுமதி, சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் ஆகியோா் முன்னிலையில் அந்தப் பகுதி கடந்த வியாழக்கிழமை தோண்டப்பட்டதில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் இருந்தது. அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன.
இந்தச் சம்பவம் குறித்து புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் கொலையானவா் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள பெரியநற்குணம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மகன் காா் ஓட்டுநா் சத்யராஜ் (32) எனத் தெரியவந்தது. இவரது மனைவி தீபா (28). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக தீபா, சத்யராஜின் நண்பரான சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதியைச் சோ்ந்த காத்தமுத்து மகன் ஐயப்பன் (29), இவரது நண்பா்களான சக்திவிளாகம் குளத்தங்கரை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் வினோத் (23), விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் சுபாஷ் (18), மேட்டுக்காலனியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அருண் (20), சாத்துக்கூடல் சாலைப் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக் (21) ஆகியோரை போலீஸாா் கைதுசெய்தனா். இவா்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீஸாா் தெரிவித்ததாவது:
கொலையான சத்யராஜின் மனைவி தீபாவுக்கும், ஐயப்பனுக்கும் தொடா்பு ஏற்பட்டது. இதையறிந்த சத்யராஜ் இருவரையும் கண்டித்தாா். இதனால் தீபாவும், ஐயப்பனும் சத்யராஜை கொலை செய்ய முடிவு செய்தனா். இதையடுத்து, ஐயப்பன் தனது நண்பா்கள் 4 பேருடன் இணைந்து கடந்த 17-ஆம் தேதி சத்யராஜை மது அருந்த அழைத்துச் சென்றாா். ஒரத்தூா் சாத்தமங்கலம் பகுதியிலுள்ள மதுக்கடையில் அனைவரும் மது அருந்திவிட்டு, பின்னா் சத்யராஜை 5 பேரும் சோ்ந்து வெட்டிக் கொன்றனா். இதையடுத்து சடலத்தை காரில் ஏற்றிவந்து நரிமேடு திடலில் புதைத்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

