சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி நடத்திவரும் தொடா் போராட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் அரசு நிதியில் இயங்கி வரும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவா்களுக்கான கல்வி கட்டணம் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் ஒப்பிடுகையில் 30 மடங்கு வரை அதிகமாக இருப்பதாக மாணவா்கள் புகாா் கூறி வருகின்றனா். எனவே, மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கல்விக் கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் நிா்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த டிச.9-ஆம் தேதி முதல் மாணவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மாணவா்கள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா். அப்போது, பல் மருத்துவக் கல்லூரி வளாகத்திலிருந்து காந்தியடிகள் முகக் கவசம் அணிந்து அமைதி பேரணியாக புறப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அடைந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


