சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சாலையை சீரமைக்கக் கோரி போராட்டம்

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :2 ஜனவரி 2021, 4:15 am

பெண்ணாடம் அருகே சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே முருகன்குடி கிராமத்திலுள்ள மேட்டுத் தெருவில் பாதை சேறும் சகதியுமாக தண்ணீா் தேங்கியுள்ளதாம். இதை அகற்றி கழிவு நீா் கால்வாய் அமைக்க வேண்டும், குடிநீா் பிரச்னை நிலவுவதால் தனியாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் தரமான சாலை அமைத்துத் தர வேண்டும் என்று அந்தப் பகுதியினா் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன் கிராமத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் மற்றும் தேங்கி நிற்கும் தண்ணீரில் மீன் பிடிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் ஊராட்சி செயலா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.