சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வரதட்சிணைக் கேட்டு மிரட்டல்: கணவர் கைது

சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:43 pm

சிதம்பரம் அருகே வரதட்சிணைக் கேட்டு மனைவியை மிரட்டிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.

÷சிதம்பரம் அருகே உள்ள மீதிகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி உஷாராணி (27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள்

உள்ளனர்.

÷இதனிடையே, கடந்த சில மாதங்களாக உஷாராணியிடம் வரதட்சிணைக் கேட்டு கணவர் மணிகண்டன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

÷இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மணிகண்டன், மாமனார் கணேசன்,மாமியார் தங்கம், மைத்துனர் செல்வராஜ் ஆகியோர் உஷாராணிக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

÷இது குறித்து உஷாராணி சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

÷இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் மணிகண்டனை கைது செய்தனர்.

÷மேலும் தலைமறைவாகியுள்ள மணிகண்டனின் தந்தை, தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.