சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மானிய விலையில் விதைகள் விநியோகம்

நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:38 pm

நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

÷இது குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

÷நடப்பு சம்பா பருவத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பி.பி.டி. 5204, இஞ(த)-50, இஞ-43 ஆகிய ரகங்கள் ஒரு கிலோவிற்கு ரூ.5 என மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

÷பரங்கிப்பேட்டை, பின்னத்தூர், சிதம்பரம் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் இந்த விதைகளை மானிய விலையில் பெற்று பயனடையலாம்.

÷தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக பி.பி.டி. 5204 சான்று நிலை விதைகள், ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வேளாண்துறை மூலம் அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

÷பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பி.பி.டி. 5204 விதைகள் 51 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.