பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளில் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
÷மேலும் இச்சம்பவங்களில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
÷பண்ருட்டி காவல் சரகத்தில் பண்ருட்டி, காடாம்புலியூர், புதுப்பேட்டை, முத்தாண்டிக்குப்பம், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் ஆகியப் பகுதிகளில் காவல் நிலையங்கள் அமைந்துள்ளன.
÷இந்நிலையில், கடந்த மூன்று வாரங்களில் மட்டும் பண்ருட்டி நகரப் பகுதியில் சுமார் 6, 7 கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
÷இச்சம்பவங்கள் நிகழ்ந்த அனைத்து இடங்களும் பகல், இரவு நேரங்களில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும்.
÷இதுமட்டுமின்றி பண்ருட்டியில் வழிப்பறிச் சம்பவங்களும் சகஜமாகி விட்டது.
போலீஸார் திணறல்:
÷இந்த தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறிச் சம்பவங்களால் பண்ருட்டி பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
÷இதனால் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் பண்ருட்டி பகுதிகளில் இரவு நேர ரோந்தைப் போலீஸார் அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

