சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கண்கள் தானம்

சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தில் காலமான 2 நபர்களின் கண்களை அரிமா சங்கத்தினர் தானமாகப்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 4:41 pm

சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தில் காலமான 2 நபர்களின் கண்களை அரிமா சங்கத்தினர் தானமாகப் பெற்றனர்.

÷பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுஅம்மாள் (75). சிதம்பரம் பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்தவர் முனுசாமி (72).

÷இவர்கள் கடந்த சனிக்கிழமை காலமாயினர். இதையடுத்து அவர்களின் கண்களை சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் ஆகியவை தானமாகப் பெற்றன.÷பின்னர் அந்த கண்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் தாமரைச்செல்வன், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் சமுத்திரராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.