ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
÷கடலூர் மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. அணி நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.÷கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ரா.குணா தலைமை வகித்தார். தலைவர் சுகுமாறன், மாநில மூத்தோர் அணிச் செயலர் பாண்டியன், நகரத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொறுப்பாளர் மணிகண்டன் வரவேற்றார்.
தீர்மானங்கள்:
÷பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக செய்ய வேண்டும்.÷மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. எஸ்.சி. அணியின் சார்பில் தீண்டாமை ஒழிப்புப் பேரணியை நடத்த வேண்டும்.
÷ஆதி திராவிடர்களுக்கான அரசு சலுகைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.÷ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.÷மத ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிட இந்து மக்களை மறைமுகமாக மதம் மாற தூண்டுவதாக அமையும். எனவே இந்த கோரிக்கையை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.÷பா.ஜ.க. மாநிலச் செயலர் பழனிவேல்சாமி, மாநில எஸ்.சி. அணி பொதுச்செயலர் செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், உமாபதிசிவம், கோவிந்தராஜன், விஜயரங்கன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

