காட்டுமன்னார்கோவில் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவர் பெருவிழாவில் விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து வேளாண் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில் பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத் துறை, கூட்டுறவுத் துறை பங்கேற்ற உழவர் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சரியாக வழங்கப்படவில்லை, அரசு நிவாரணமும் சரியாக வழங்கப்படவில்லை என வலியுறுத்தி, விவசாய சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.
பின்னர் கூட்டத்தில் தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டுள்ள மானியத் திட்டங்கள் அவர்களை சென்றடையவில்லை. மானியங்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்துச் சென்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

