நெய்வேலியில் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்ற என்எல்சி ஊழியர், நடந்துசென்ற மற்றொரு என்.எல்.சி. ஊழியர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை இறந்தார்.
நெய்வேலி வட்டம், 25-ஐ சேர்ந்த செல்வானந்தமும், வட்டம் 27-ஐ சேர்ந்த உதயசூரியனும் என்.எல்.சி. முதல் சுரங்கத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் உதயசூரியன் சனிக்கிழமை நெய்வேலி காமராஜ் சாலையில் நீச்சல்குளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த செல்வானந்தம், நடந்துசென்ற உதயசூரியன் மீது மோதியுள்ளார்.
இதில் உதயசூரியன் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்துள்ளார். செல்வானந்தம், அருகிலுள்ள மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதைத் தொடர்ந்து விபத்துக்குள்ளான உதயசூரியன் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து தொடர்பாக உதயசூரியனின் மனைவி தேன்மொழி கொடுத்தப் புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

