விருத்தாசலத்தை அடுத்த முருகன்குடி கிராமத்தில் "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் கவிஞர் ரா.தீபன்குமார் எழுதிய "உயி(ய)ர் மூச்சு' எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.கவிதை நூலை எழுத்தாளர் இமயம் வெளியிட முனைவர் இரத்தின.புகழேந்தி, திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.விழாவில், கவிஞர் செ.அமிர்தராசு வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் பழனியப்பன் தலைமை ஏற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் மு.வள்ளியம்மை முன்னிலை வகித்தார்.திராவிடர் கழகப் பேச்சாளர் முத்து.கதிரவன், கவிஞர் கரிகாலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.நிகழ்ச்சியில், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்டப் பொருளர் மாய.முனுசாமி, ஜெகதீஸ்வரன், பிச்சைமொஷிதீன், கவிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கவிதை நூல் ஆசிரியர் கவிஞர் ரா.தீபன்குமார் நன்றி கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

