சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்

ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதி 4, 5-ஆவது பிளாக் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

Updated On :12 ஆகஸ்ட் 2013, 9:03 am

ஜெ.ஜெ.நகர் மேற்கு பகுதி 4, 5-ஆவது பிளாக் வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு மழை நீர் செல்வதற்கு அமைக்கப்படுள்ள கால்வாயில் புதிதாக உருவாகியுள்ள அடுக்குமாடிக் கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அதிகரித்துள்ள கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. இந்தக் கழிவு நீர் அருகில் உள்ள கால்வாய் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் கலப்பதால் நீர் மாசுபடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.