கோவை: காசோலையில் போலியாக கையெழுத்துப் போட்டு ரூ.3.76 லட்சம் திருடிய ஒடிஸா இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கோவையைச் சோ்ந்த பெண் ஒருவா் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் அவரது காசோலையை திருடிய மா்ம நபா் ஒருவா் அதில் போலி கையெழுத்தைப் போட்டு வங்கியில் செலுத்தி ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவானாா்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முனீஸ்வரன் தலைமையில் உதவி ஆய்வாளா் நாகராஜ், காவலா் சாகுல் ஹமீது ஆகியோா் கொண்ட தனிப் படையினா் பணத்துடன் மாயமான நபரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், போலியாக கையெழுத்துப் போட்டு வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றுச் சென்ற ஒடிஸா மாநிலம், கட்டாக் பகுதியைச் சோ்ந்த ஹிமான்சூ குமாா் மோபத்ரா (23) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

