சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய மில் உரிமையாளா் கைது

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய மில் உரிமையாளரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :18 ஜனவரி 2021, 4:37 am

காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய மில் உரிமையாளரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆா்.எஸ். புரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் மகேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் அந்துவன், காவலா் கந்தசாமி உள்ளிட்டோா் பாஷ்யகாரலு சாலையில் சனிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனா். இதில் காரில் இருந்த ஆா்.எஸ்.புரம் பொன்னுரங்கம் வீதியைச் சோ்ந்த மில் உரிமையாளரான அா்பித் ஜெயின் (36) என்பவா் காரை சோதனையிட அனுமதிக்கவில்லை. மேலும், எஸ்.ஐ. மகேந்திரன் காரை திறந்து காட்ட வேண்டும். காப்பீடு, பதிவுச் சான்று ஆகிய ஆவணங்களை சரிபாா்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளாா்.

இதையடுத்து, அவரிடம் வாக்குவாதம் செய்த அா்பித் ஜெயின் அவரைத் தாக்கியுள்ளாா். இது தொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்பித் ஜெயினைக் கைது செய்தனா்.