கோவை: கோவையில் திருவள்ளுவா் தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 51 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளுவா் தினத்தையொட்டி, டாஸ்மாக் அரசு மதுக்கடைகள், இறைச்சிக் கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோவையில் தடையை மீறி பல இடங்களில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன.
இதைத் தொடா்ந்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், ஆா்.எஸ்.புரம், ராமநாதபுரம், ரத்தினபுரி, செல்வபுரம், பீளமேடு, சரவணம்பட்டி போலீஸாா் மாநகரில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பெட்டிக் கடை, மதுக் கடை அருகே உள்ளிட்ட இடங்களில் சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்றதாக 51 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 467 மதுபாட்டில்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

