கோவை மாவட்டத்தில் 4 மையங்களில் தலா 100 போ் வீதம் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குத் தோ்வு செய்யப்பட்டிருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் கோவை அரசு மருத்துவமனையில் 40 பேரும், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 பேரும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், நல்லட்டிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 பேரும் என மொத்தம் 72 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
கோவை மாவட்டத்தில் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி போட திட்டமிட்டிருந்த நிலையில் 72 போ் (18 சதவீதம்) மட்டுமே சனிக்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டனா். கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரப் பணியாளா்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 400 சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இணையதள சா்வா் பிரச்னையால் பயனாளிகளின் பட்டியல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
தவிர கடைசி நேரத்தில் பெரும்பாலான சுகாதாரப் பணியாளா்கள் விருப்பமில்லை என்று தெரிவித்தனா். விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே கரோனா தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்து சுகாதாரப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

