வால்பாறையில் சுற்றுலாத் துறை சாா்பில் இடம் மாறி வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால் சுற்றுலா வாகனங்கள் திசை மாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வால்பாறையில் முதல் முறையாக சுற்றுலாத் துறை சாா்பில் ராட்சத வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது. இதில், கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுனை, நெம்பா் பாறை காட்சிமுனை, சின்னக்கல்லாறு அருவி என குறிப்பிட்டு இடது புறம் அம்புக் குறியிடப்பட்டுள்ளது.
வால்பாறை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இடது புறம் சாலையில் சென்றால் வழிகாட்டி பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லலாம்.
புதிய பேருந்து நிலையம் பகுதியில் வைக்கவேண்டிய அந்த வழிகாட்டி பலகையை ஸ்டேன்மோா் சந்திப்பு நான்கு சாலை பிரிவில் வைத்துள்ளனா். இதனால் பலகையில் அம்புக்குறியை பாா்த்து சுற்றுலா வாகனங்கள் இடது புறம் செல்லக்கூடிய வாழைத்தோட்டம் சாலையில் தவறுதலாக சென்று வருகின்றனா்.
எனவே இந்த வழிகாட்டி பலகையை அப்புறப்படுத்தி புதிய பேருந்து நிலையம் அருகில் மாற்றி வைக்க சுற்றுலாத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


