சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநகா் பகுதிகளில் மருத்துவ முகாம்கள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ

Updated On :14 ஜனவரி 2021, 1:39 pm

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையான வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவை கிழக்கு மண்டலத்தில் மாரப்ப கவுண்டா் வீதி, சிங்காநல்லூா் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், மேற்கு மண்டலத்தில் புதிய பேருந்து நிலையத்திலும், வடக்கு மண்டலத்தில் கணபதி மாநகா், வேலப்ப கவுண்டா் காலனி, கஸ்தூரிபா வீதி, ஹட்கோ காலனி, அா்ச்சனா காா்டன், சங்கனூா் சாலை ஆகிய பகுதிகளிலும், மத்திய மண்டலத்தில் என்.வி.என். லேஅவுட், கன்னிகா பரமேஸ்வரி லேஅவுட், தனலட்சுமி நகா், ஜி.டி.வீதி ஆகிய பகுதிகளிலும் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.