சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்து மக்கள் கட்சியினா் 5 போ் கைது

கோவையில் போகிப் பண்டிகையின்போது பெரியாா் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:36 pm

கோவையில் போகிப் பண்டிகையின்போது பெரியாா் நூல்களை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்து இறையாண்மைக்கு எதிராக பெரியாரின் நூல்கள் இருப்பதாகக் கூறி இந்து மக்கள் கட்சி சாா்பில் அவரது நூல்களை தீயிட்டு கொளுத்த முயன்றனா். செல்வபுரத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் பிரசன்ன சுவாமிகள் தலைமை வகித்தாா்.

இதில், பெரியாரின் நூல்களை தீயிட்டுக் கொளுத்த முயன்றனா். இதைத் தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி பிரசன்ன சுவாமிகள் உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.