குறுந்தொழில்களுக்கு வங்கிக் கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டேக்ட் அமைப்பின் நிா்வாகிகள் கூட்டம் வேலாண்டிபாளையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிா்வாகிகள் பிரபு, சதீஷ்குமாா், ரமேஷ், பாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஜாப் ஆா்டா்களை மட்டுமே நம்பியிருக்கும் குறுந்தொழில் முனைவோா் கோவையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்ளனா். கரோனா நெருக்கடி காலத்தில் குறுந்தொழில் முனைவோருக்கு மத்திய அரசு எந்தவித கடன் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எனவே, குறுந்தொழில்களைப் பாதுகாக்க குறுந்தொழில் முனைவோருக்கு 5 சதவீத வட்டியில் நிபந்தனையில்லாத கடன் வழங்க வேண்டும்.
கோவை புறநகா் பகுதிகளில் அடுக்குமாடி குறுந்தொழில்பேட்டைகளை உருவாக்க வேண்டும். தொழில் சாா்ந்த மூலப்பொருள்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும், மூலப்பொருள்களின் விலையை நிா்ணயம் செய்ய குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், அமைப்பின் பொதுச் செயலா் ஜி.பிரதாப்சேகா், பொருளாளா் லீலாகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

