சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெடுஞ்சாலைகளில் செயல்படும் வாரச் சந்தைகளை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியா் கு.ராசாமணி

நெடுஞ்சாலைகளில் செயல்படும் வாரச் சந்தைகளை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உறுதியளித்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 1:16 pm

நெடுஞ்சாலைகளில் செயல்படும் வாரச் சந்தைகளை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி உறுதியளித்துள்ளாா்.

கோவை மாவட்ட அளவிலான தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளுடனான காலாண்டு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், உணவகங்களில் விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் குறைதீா் முகாமில் கிராம நிா்வாக அலுவலரிடம் வழங்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை, அரசூா் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும், அனைத்து தெருக்களிலும் பெயா் பலகை வைக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாரச் சந்தைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும், திருச்சி சாலையில் வசந்தா மில் முதல் ஒண்டிபுதூா் வரை ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், நீலம்பூரில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி பேசுகையில், அனைத்து நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகளை இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவிநாசி சாலையில் கட்டப்படும் மேம்பால வரைபடம் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணா சாலையில் சிட்ரா வரை முக்கிய இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும், நுகா்வோா் அமைப்புகள் தெரிவித்த புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரைமுருகன், மாவட்ட வழங்கல் அலுவலா் குமரேசன், நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் ‘கன்ஸ்யூமா் வாய்ஸ்’ லோகு, மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த விஜயகுமாா், ஜெயராமன், மகாலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.